களுத்துறை மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்த ஏ.எஸ்.எம். பவ்ஸி ஹாஜியார் (78) அவர்கள் நேற்று (14) மக்கொனை இந்திரிலிகொடை இல்லத்தில் காலமானார்.
பவ்ஸி ஹாஜியார், களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவராகவும், மாணிக்கக்கல் வர்த்தகத்தில் பிரபலமானவரும், சமாதான நீதிவானாகவும் விளங்கினார்.
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக பேருவளை மற்றும் களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி, சமயம், சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக தொடர்ந்து உழைத்தார்.
முக்கிய பங்களிப்புகள்
களுத்துறை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தில் பல்வேறு பதவிகள் வகித்து, பின்னர் தலைவராக பொறுப்பேற்றார்.
அலவியத்துல் காதிரிய்யா தரீக்காவின் மூத்த இஃவான்களில் ஒருவராக ஆன்மீக சேவையாற்றினார்.
மக்கொனை இந்திரிலிகொடையில் அஷ்ஷெய்க் ஹம்ஸா ஆலிம் அவர்களின் நினைவாக வீடமைப்புக் கிராமம் ஒன்றை உருவாக்க பங்களித்தார்.
சிங்கள – முஸ்லிம் இன ஒற்றுமைக்காக ஆக பாடுபட்டார்.
அரசியல் மற்றும் சமூக நெருக்கம்
மர்ஹூம் பவ்ஸி ஹாஜியார், முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் எம்.ஏ. பாக்கீர் மாக்கார் மற்றும் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
அவரது பங்களிப்பால் களுத்துறை மாவட்ட முஸ்லிம்களுக்கு பல்வேறு சேவைகள் கிடைத்தன.
அவரது மறைவு குறித்து முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்.
“மர்ஹூம் பவ்ஸி ஹாஜியார் தனது வாழ்நாள் முழுவதும் சமூக சேவையிலும், முஸ்லிம் சமூக முன்னேற்றத்திலும் அர்ப்பணித்திருந்தார். மக்கொனை இந்திரிலிகொடையில் அஷ்ஷெய்க் ஹம்ஸா ஆலிம் அவர்களின் நினைவாக வீடமைப்புக் கிராமம் ஒன்றை உருவாக்க பங்களித்தார்.எனது தந்தையினதும் எனது அரசியல் வெற்றிக்காகவும் அவர் செய்த உழைப்பு மறக்க முடியாதது. அவரது மறைவு களுத்துறை மாவட்டத்திற்கே ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாகும்” மேலும் இரத்தினக்கல் வர்தகரான அவர் இரத்தினக்கல் வர்த்தகத்தில் நேர்மை, நம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாக இருந்தார். மாணிக்கக்கல் துறையில் நீதியான வியாபாரியாக திகழ்ந்த அவர் அதன் மூலம் புகழ் பெற்றவராக விளங்கினார் எனக் குறிப்பிட்டார்.
அன்னாரின் ஜனாஸா இன்று (15) திங்கட்கிழமை ளுஹர் தொழுகைக்குப் பின் மக்கொனை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் பவ்ஸி ஹாஜியாரின் பாவங்களை மன்னித்து, அவர் ஆற்றிய சமூக சேவைகளை அங்கீகரித்து, ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை அருளுவானாக. ஆமீன்.
நன்றி .
தினகரன்
உதயன்