2025 செப்டம்பர் 07ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இந்த கிரகணம் இலங்கையுடன் உலகின் பல நாடுகளிலும் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கும் என கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவுத் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன அவர்கள் தெரிவித்தார்.
கிரகணத்தின் நேரம்
தொடக்கம்: செப்டம்பர் 07 இரவு 8.58
முடிவு: செப்டம்பர் 08 அதிகாலை 2.25
மொத்த காலம்: 5 மணி 27 நிமிடங்கள்
முழு சந்திர கிரகணம் காணும் நேரம்
தொடக்கம்: செப்டம்பர் 07 இரவு 11.01
முடிவு: செப்டம்பர் 08 அதிகாலை 12.22
மொத்த காலம்: 1 மணி 22 நிமிடங்கள்
சூரியன் மற்றும் சந்திரன் இடையில் பூமி வருவதால், சந்திரன் பூமியின் கரும் நிழலுக்குள் செல்கிறது. இதனால் சந்திரன் முழுமையாக இருண்டு காணப்படும். இந்த அபூர்வமான காட்சி அரிதாகவே நிகழ்கிறது.
இந்த சந்திர கிரகணம் முழுமையாகவோ அல்லது பகுதியளவோ உலக மக்கள் தொகையில் சுமார் 85% பேருக்கு தென்படும்.
இலங்கையர்களுக்கு அடுத்த முறையாக இத்தகைய முழு சந்திர கிரகணம் 2028 ஆம் ஆண்டுக்குப் பிறகே காணக் கிடைக்கும் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment